2023-06-29T15:06:44
VEMBALAMPATTAI POWDER (RATANJOT)
வேம்பாளம் பட்டை என்பது ஒரு வகை மரத்தினுடைய பட்டை ஆகும். இது உடல் ஆரோக்கியம் தொடங்கி அழகு சார்ந்த பிரச்சினை வரை அத்தனைக்கும் தீர்வு தரும் அற்புதமான மூலிகையாகும். இதை ஆங்கிலத்தின் ரத்தன் ஜோட் (Ratan Jot) என்று அழைப்பார்கள்.
1. தேங்காய் எண்ணெயில் வேம்பாளம் பட்டையை கலந்து, தினமும் தலையில் தடவினால்.. முடி அடர்த்தியா காடு மாதிரி வளரும். முடி உதிர்வு, வழுக்கை பிரச்சினைக்கு தீர்வளிக்கிறது
2. வேம்பாளம் பட்டை எண்ணெய், பொடி இரண்டுமே சருமத்திற்கு நல்லது.
3. அதிகப்படியான சூரிய வெப்பத்தைத் தாக்குப்பிடித்து புறஊதா கதிர்களால் ஏற்படும் முடியின் சேதத்தைக் குறைத்து முடிக்கு பாதுகாப்பு வழங்குகிறது.
4. வேர்க்கால்கள் முதல் நுனி வரையிலும் உறுதியாக்கி முடி உடைவதைத் தடுக்கிறது, அதோடு முடியின் வளர்ச்சியையும் வேகமாகத் தூண்டும்.
5. தலைவலி - வேம்பாளம் பட்டையில் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. இதை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தடவி வர இரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைவலியை குறைக்கிறது.
6. காய்ச்சல் - வேம்பாளம் பட்டை குளிர்ச்சியான ஒன்று. இதன் கசாயம் உடம்பு சூட்டை தணிப்பதால் காய்ச்சலுக்கு பயன்படுகிறது. வியர்வையை அதிகரித்து காய்ச்சலை குறைத்து விடும்.
Have a question? Ask here!
Required fields are marked *